அதிமுக ஆட்சியில் எல்லா இடங்களிலும் சாலை...திமுக ஆட்சியில் சாலைகள் சேதம் - இபிஎஸ் குற்றச்சாட்டு!
அதிமுக ஆட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி, பேருந்து வசதி செய்து கொடுக்கப்பட்டதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் தார் சாலைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான் என பெயர் பெற்றதாக கூறினார். ஆனால் தற்போது சாலைகள் சின்னா பின்னமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.
இதையும் படிக்க : " பேப்பரே இல்லாத இடத்தில் பேனாவை எதற்கு வைக்கனும்.. ?" - நடிகை கஸ்தூரி பேச்சு.
அதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் 100 ஏரி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு இருக்கும் என்றும், ஆனால் தற்போது திமுக ஆட்சியில் அத்திட்டம் ஆமை வேகத்தில் நடந்து வருவதாகவும் விமர்சித்தார். வறண்ட ஏரிகளுக்கு உபரி நீரை கொண்டு செல்லும் இத்திட்டத்தை திமுக அரசு விரைவு படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் அனைவரையும் குடிகாரர்களாக மாற்ற திமுக அரசு முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.