தக்காளி லோடு ஏற்றி சென்ற வேன் மோதி உதவி ஆய்வாளர் பலி!

வேலூரில் தக்காளி லோடு ஏற்றி வந்த மினிவேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தக்காளி லோடு ஏற்றி சென்ற வேன் மோதி உதவி ஆய்வாளர் பலி!

வேலூரில் தக்காளி லோடு ஏற்றி வந்த மினிவேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தை சேர்ந்த தேவேந்திரன் என்பவரின் மகன் கார்த்திக். இவர் மேல்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கே.வி. குப்பத்திலிருந்து குடியாத்ததை நோக்கி தனது இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னாங்குப்பம் கூட்ரோடு பகுதியை சென்றடையும் போது எதிரே தக்காளி லோடு ஏற்றி வந்த மினிவேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்த நேரில் சென்ற கே.வி.குப்பம் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மினிவேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.