சரத்பாபு இறுதி சடங்கு! நாளை சென்னையில் நடைபெறுகிறது!!

சரத்பாபு இறுதி சடங்கு! நாளை சென்னையில் நடைபெறுகிறது!!

தென்னிந்திய திரைதுறையின் முன்னாடி நடிகர் சரத்பாபு இறுதி சடங்கு நாளை சென்னையில்  நடைபெறுகிறது.

தென்னிந்திய திரை உலகில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக, இணை நாயகனாக, குணச்சித்திர நாயகனாக நடித்தவர் சரத்பாபு, 71 வயதான சரத்பாபு செப்சிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது நடிகர் சரத்பாபு உடலானது ஹைதராபாத்தில் உள்ள மா சங்க அலுவலகத்தில் (MAA Association) பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் அவரது உடலானது சாலை மார்க்கமாக ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு நாளை காலை கொண்டு வரப்பட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள வைத்திய ராமன் தெருவில் உள்ள இல்லத்தில் சரத்பாபு உடலானது பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது. 

அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் வருகைக்கு பின், அவரது  உடல் எப்போது, எங்கு அடக்கம் செய்யப்படும் என முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. "நடிகர் சரத்பாபு மறைவு எங்களை பெருமளவில் பாதிப்படைய செய்துள்ளது. அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தால், பல மாதங்களாக சென்னை இல்லம் பூட்டியே நிலையில் இருந்தால், தற்போது சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆகையால் இறுதி மரியாதை இங்கு அல்லது வேறு பொது இடத்தில் செலுத்தாமா என்று ஆலோசித்து வருகிறோம்" என அவரது உதவியாளர் அப்பாராவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:கட்சி பொறுப்பிலிருந்து விலகிய பாஜகவின் ஒரே ஒரு கவுன்சிலர். காரணம் என்ன?