சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விவகாரம்... அடுத்த கட்ட விசாரணை ஆக. 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு...

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விவகாரம்... அடுத்த கட்ட விசாரணை ஆக. 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு...

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது நேற்று மதுரை மாவட்ட  முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பத்மநாபன்  முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட 9பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். முன்னதாக இந்த வழக்கின் முக்கிய சாட்சியான ஜெயராஜின் உறவினரான ஜெய்சிங்ராஜா நீதிபதி முன்பு சாட்சியம் அளித்தார்.  

இதனையடுத்து குற்றம்சாட்டபட்டவர்கள் தரப்பிலும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.  இதையடுத்து வழக்கு விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பத்மநாபன் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.