திடீரென கழன்று ஓடிய ஸ்கூல் பஸ் டையர்.. டக்குன்னு பிரேக் போட்ட டிரைவர்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி

தாராபுரம் தனியார் பள்ளி பேருந்தின் பின் சக்கரம் இரண்டும் கழண்டு ஓடியதில் 15 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

திடீரென கழன்று ஓடிய ஸ்கூல் பஸ் டையர்.. டக்குன்னு பிரேக் போட்ட டிரைவர்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் வகுப்பு முடித்துவிட்டு பள்ளி பேருந்தில் ஏறி வீடுகளுக்கு மாணவ மாணவிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பொன்னாபுரம் என்ற கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்த பேருந்திலிருந்து திடீரென பின் சக்கரங்கள் இரண்டும் கலந்து ரோட்டில் ஓடியது. 

இதை பார்த்து துரிதமாக செயல்பட்ட டிரைவர் பேருந்தை உடனே நிறுத்தியதால் பெரும் அசபாவிதம் தவிர்க்கப்பட்டது.  இருப்பினும்,திடீரென பிரேக் போட்டதால் பேருந்தில் இருந்த 15 மாணவ. மாணவிகள் காயம் அடைந்தனர். மாணவ-மாணவிகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் மாணவ மாணவிகளை மீட்டு எடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து டயர் கழண்டு விழுந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க அனைத்து பள்ளி வாகனங்களையும் பரிசோதனை செய்தபிறகு பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.