10 முட்டைகளுடன்... பள்ளி மாணவர்களுக்கு உலர் பொருட்கள் வழங்க உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டையுடன் கூடிய மே மாதத்திற்கான உலர் பொருட்களை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

10 முட்டைகளுடன்... பள்ளி மாணவர்களுக்கு உலர் பொருட்கள் வழங்க உத்தரவு!

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, மே மாதத்திற்கான உலர் உணவுப் பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 1 முதல் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்புடன் 10 முட்டைகள் வழங்கப்பட உள்ளன. 

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மூவாயிரத்து 100 கிராம் அரிசி, ஆயிரத்து 200 கிராம் பருப்பும், நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 4 ஆயிரத்து 650 கிராம் அரிசி, ஆயிரத்து 250 கிராம் பருப்பும் வழங்கப்படுகிறது.

அனைத்து மாணவர்களுக்கும் உலர் உணவு பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்ததரவிட்டுள்ளது.