கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட நூற்பாலைக்கு சீல்!!

கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட நூற்பாலைக்கு சீல்!!

சூலூர் அருகே ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட நூற்பாலைக்கு தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 50 சதவிகித தொழிலாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சூலூர் அருகேயுள்ள பீடம்பள்ளி நடுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலை, அதிக பணியாட்களுடன்  இயங்குவதாக கோவை தொழிலாளர் நலத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நூற்பாலைக்கு தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.