அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 2வது நாளாக தொடர்ந்து சோதனை...!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 2வது நாளாக தொடர்ந்து சோதனை...!!

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் மற்றும் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  

தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறுவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினரும், ஆதரவாளருமான செந்தில் கார்த்திகேயன் வீடு உள்ளிட்ட இடங்களில் 2 வது நாளாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

ஏற்கனவே, கரூரில் சோதனையின் போது, திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத திமுகவினர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், திமுகவினர் கொடுத்த புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில், கரூரின் சில பகுதிகளில் சர்ச்சை குறிய வகையிலான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கிய கோடை மழை...!!