விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஒரு கட்சி தற்போது மத்தியில் ஆட்சி செய்வது அவலம்!

விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஒரு இயக்கம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு மோசமான நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்  

விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஒரு கட்சி தற்போது மத்தியில் ஆட்சி செய்வது அவலம்!

நாட்டின் 75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னை தி நகரில் உள்ள காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், எண்ணற்ற தியாகங்களை செய்து விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி சுதந்திரமடைந்த பவள விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்த ஆண்டு முழுவதும் பவள விழா கொண்டாடப்படும் என கூறினார்.

இந்தியாவின் துயரம் என்னவென்று சொன்னால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஒரு இயக்கம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு மோசமான நிலைமை ஏற்பட்டிருப்பதாக கூறிய அவர், மோடி அவர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முன்பாக பாரத நாடு பிரிவினையின் கொடுமை தினத்தை கொண்டாடி இருக்கிறார்கள்.  ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என்றுதான் நாட்டு மக்கள் விரும்பினார்கள் ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை கடைசிவரை இந்து மகாசபையும் ஆர்எஸ்எஸின் தான் ஆதரித்து என தெரிவித்தார். அப்படிப்பட்டவர்களுக்கு இந்திய நாட்டு சுதந்திரத்தை பற்றி பேசுவதற்கு இந்தியாவின் மக்களின் சுதந்திர வேட்கையை நினைவுகூறவும், எந்தவித தகுதியும் கிடையாது என கூறிய அவர், மோடி எந்த ஒரு பெரிய திட்டத்தை கொண்டு வரப் போகிறார் என்பது நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் விரோத திட்டங்களை மக்களே முறியடிப்பார்கள் தமிழ்நாட்டில் இறை உணர்வு இறைநம்பிக்கை எல்லாருக்கும் உள்ளது அதையே அரசியலுக்குப் பயன்படுத்துவது தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பாராட்டுக்குரிய ஒரு விஷயம் கேரளாவில் 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்று நிகழ்வை கேரளாவில் கம்யூனிஸ்ட் ஏற்படுத்தியிருக்கிறது அதனை பின்பற்றி தமிழகம் தற்போது மேற்கொண்டு இருக்கக்கூடிய இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது என கூறினார்