சாதியவாதிகளிடமும் மதவாதிகளிடமும் மண்டியிடும் சீமானண்ணே... வெச்சு பங்கம் பண்ணும் வன்னி அரசு..!!

சாதியவாதிகளிடமும் மதவாதிகளிடமும் மண்டியிடும் சீமானண்ணே... வெச்சு பங்கம் பண்ணும் வன்னி அரசு..!!

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்தன. அதேசமயம் இந்த படத்திற்கு சில எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் தொடர்ந்தன.

அந்த வகையில், பாமக தரப்பு படத்தை கண்டித்தது.. படத்தில் நடித்த சூர்யாவுக்கும் மிரட்டல் விடுத்தது. இருப்பினும் சூர்யாவிற்கு  விசிக உள்ளிட்ட அரசியல் கட்சி சார்பாகவும். திரைபிரபலங்கள் சார்பாகவும் ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது. இந்த பிரச்சனை ஒரு புறமிருக்க, மற்றொரு புறம் சீமான் பேசியது மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆம் அப்படிபட்ட சூழலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் ஜெய்பீம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ஜெய்பீம் படத்தை பார்த்தபோது எனக்கு அதுபோன்று எதுவும் தெரியவில்லை.. ஆனால், மற்றவர்கள் இதுகுறித்து பேசியபோது தான் எனக்கு தெரியவந்தது.. அக்னி கலசம் பாமகவின் குறியீடு என்பது உலகிற்கே தெரியும். அதேபோல வன்னியர் சங்கத்தின் அடையாளமாக இருக்கும் அந்த குறியீட்டை ஏன் காலண்டரில் பயன்படுத்த வேண்டும்? அதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். நான் கவனித்திருந்தால் முன்பே அதனை நீக்க சொல்லியிருப்பேன்" என்றார்.

சீமானின் இந்த பேச்சுக்கு விசிகவின் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அப்போதே இது தொடர்பாக ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், "சாதி மாறி திருமணம் செய்யக்கூடாது என்பது தான் #இந்துத்துவக்கட்டமைப்பு. சாதி மீறி திருமணம் செய்தால் படுகொலை செய்கிறது மதவாதம். அதன் பெயரே #ஆணவப்படுகொலை.இந்த இந்துத்துவக்கருத்தியலே இந்தியா முழுக்க படுகொலை செய்யத்தூண்டுகிறது. இதுகூட தெரியாமல் உளறிக்கொண்டு இருக்கிறார்" என்று சீமானையே டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களில் தலித்துகளை இழிவுபடுத்தும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என சொல்ல துணிச்சல் இல்லாமல் அக்னிசட்டிக்கு மட்டும் பொங்குவது என்ன உளவியல்?" என்று வன்னி அரசு மீண்டும் அதில் கேள்வி எழுப்பியிருந்தார்.



இந்தநிலையில் ஒரு பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படம் ஒன்றில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும், சீமானும் இருப்பது போன்ற போட்டோவை பதிவிட்டுள்ளது. அதில் சேரில் ராமதாஸ் அமர்ந்திருக்கின்றார். அவருக்கு பக்கத்திலேயே சீமான் மண்டியிட்டு கீழே உட்கார்ந்து ராமதாஸிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார். இந்த போட்டோ தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வார பத்திரிக்கையில் வந்திருக்கும் இந்த போட்டோவை தான் வன்னி அரசு ஷேர் செய்து, ஒரு பதிவும் போட்டுள்ளார்.. அதில், "சாதியவாதிகளிடமும் மதவாதிகளிடமும் மண்டியிடும் எவனும் சமத்துவத்தை படைக்க முடியாது"- தோழர் பெரியார்.. "கேட்டுச்சாண்ணே".. என்று பதிவிட்டுள்ளார்.  இந்த ட்வீட்டிற்கு பலர் பதில் கமெண்டும், கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.