சூட்கேஸ் பிடியில் மறைத்து வைத்து கடத்தி வந்த 2 கிலோ தங்கம் பறிமுதல்

அபுதாபியில் இருந்து சென்னைக்கு சூட்கேஸ் பிடியில் மறைத்து கடத்தி வந்த ரூ. 90 லட்சத்தி 17 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

சூட்கேஸ் பிடியில் மறைத்து வைத்து கடத்தி வந்த 2 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து  விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது வெளியே செல்ல வந்த 31 வயது மதிக்கத்தக்க பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.  

அவரை நிறுத்தி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை மேற்க்கொண்டனர்.

சோதனையில் முடிவில் ஏதுவும் சிக்கவில்லை என தெரிகிறது. அதன்பின்னர் அவர் கொண்டு வந்த சூட்கேஸ் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அதனை சோதனை செய்தனர்.சோதனையில் சூட்கேசின் கைப்பிடியில் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகார்கள் வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.