வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல்.. பர்சு, ஷூவில் மறைத்து வைத்து கடத்தல்

துபாய், கொழும்புவில் இருந்து உள்ளாடைகள், ஷூ மற்றும் பர்சுகளில் மறைத்து வைத்து சுமார் 3 கிலோ தங்கத்தை சென்னைக்கு கடத்தி வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல்.. பர்சு, ஷூவில் மறைத்து வைத்து கடத்தல்

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் பன்னாட்டு விமான முனையத்தில் பயணிகளிடம் சுங்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது துபாயில் இருந்து வந்த கேரளாவை சேர்ந்த நிசார் என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில்,

பர்ஸ் மற்றும் ஷூவில் தங்கத்தை மறைத்து  கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் இருந்து, 64 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 402 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

இதேபோல், கொழும்பு, சார்ஜாவில் இருந்து வந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உள்ளாடை, உடமைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 6 பேரையும் கைது செய்த அதிகாரிகள்,  69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்

ஒரே நாளில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில்  1 கோடியே 24 லட்சத்து 48 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 902 கிராம் தங்கம் சிக்கியது