அதிமுக ஆட்சியில் 444 பேரின் மரணம் மறைப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு செந்தில் பாலாஜி பதிலடி ...

அதிமுக ஆட்சியில் 444 பேரின் மரணம் மறைப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு செந்தில் பாலாஜி பதிலடி ...

அதிமுக ஆட்சியில் 444 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தது மறைக்கப்பட்டு பின்னர் எப்படி வெளியே வந்தது என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

கரூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில்  20 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய நவீன பேருந்தை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்சியரிடம் வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம்,  தமிழக அரசு கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கிறது என்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  

அதற்கு பதிலளித்த அவர், அதிமுக ஆட்சியில் கொரோனா தொற்றால் 444 பேர் உயிரிழந்ததை மறைத்ததும், அது எப்படி வெளி உலகத்துக்கு தெரியவந்தது என்பதும் தமிழக மக்களுக்கு தெரியும் என கூறினார். மேலும், கொரோனா சிகிச்சை அளிப்பதில் தமிழக அரசு ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக இயங்கி வருகிறது என்றார்.