முந்தைய அரசு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் தான் மின் தடை: தங்கமணி குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி பதிலடி...

முந்தைய அரசு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத காரணத்தால் தான், தமிழகத்தில் மின் தடை ஏற்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

முந்தைய அரசு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் தான் மின் தடை:  தங்கமணி குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி பதிலடி...

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் கேள்விகளுக்கு பதில் அளித்து, சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக பராமரிப்பு பணி நடைபெறவில்லை என்றும், தற்போது 10 நாட்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மின்சார வாரியத்தின் கடன் சுமை 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.