செப்.1 பள்ளிகள் திறப்பது உறுதி… மாணவர்கள் வருவது குறித்து விளக்கம்…  

செப்டம்பர் 1ஆம் தேதி 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதில் தான் அரசு உறுதியாக இருக்கிறது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.

செப்.1 பள்ளிகள் திறப்பது உறுதி… மாணவர்கள் வருவது குறித்து விளக்கம்…   

செப்டம்பர் 1ஆம் தேதி 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதில் தான் அரசு உறுதியாக இருக்கிறது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரையில் தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் ஆலோசனைக்குழு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் படி தயார் நிலையில் இருக்கவேண்டும் என அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரின் ஒத்துழைப்புடன் தயார் நிலையில் இருக்க தெரிவித்துள்ளோம் என்றார்.

மேலும் தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 1ஆம் தேதி 9,10, 11, 12 ஆம் வகுப்புகள் தொடங்கப்படும் அதற்கான தயார் நிலையில் உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.