12-ஆம் வகுப்பு மாணவியிடம் திருமண ஆசை காட்டி பாலியல் அத்துமீறல்...இளைஞர் கைது

சென்னை அடுத்த புளியந்தோப்பில் 12-ஆம் வகுப்பு மாணவிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

12-ஆம் வகுப்பு மாணவியிடம் திருமண ஆசை காட்டி பாலியல் அத்துமீறல்...இளைஞர் கைது

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். இவர் கடந்த 15ஆம் தேதி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் அதில்  பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த தனது மகள் காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் மனுவில் கூறியிருந்தார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து மாணவியின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினார் விசாரணையில் மாணவியை வால்டாக்ஸ் ரோடு மன்னார் தெரு பகுதியைச் சேர்ந்த வசந்த்  என்ற நபர் திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது தெரியவந்தது

இதனையடுத்து நேற்று மாணவி மற்றும் வசந்த்தை கைது செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வசந்த் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து வசந்த் மீது வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்