பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - கணித ஆசிரியரை கைது செய்த போலீஸ்...

கும்பகோணத்தில் பாலியல் தொந்தரவு செய்வதாக மாணவிகள் கொடுத்த புகாரை தொடர்ந்து போலீஸார், சம்பந்தபட்ட ஆசிரியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - கணித ஆசிரியரை கைது செய்த போலீஸ்...

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே 150 ஆண்டுகள் பழமையான நகர மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாக உள்ளது. சேகர் என்பவர் இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் பாடம் கற்றுக்கொடுக்கும் கணித ஆசிரியர் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக பள்ளி செயலாளரிடம் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவிகள் புகார் அளித்தனர்.

அதனைதொடர்ந்து வேலப்பன் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கணித ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், கணத ஆசிரியர் சேகரை இன்று கைது செய்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.