திமுக, அதிமுகவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு: பதற்றத்தை தணிக்க போலீஸ் குவிப்பு...

தேர்தல் முன்விரோதம் காரணமாக திமுக, அதிமுகவினருக்கு இடையே நடைபெற்ற மோதலில், 5 பேருக்கு அரிவாள் வெட்டு, வன்முறை வெடிக்காமல் இருக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

திமுக, அதிமுகவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு: பதற்றத்தை  தணிக்க போலீஸ் குவிப்பு...

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த முத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அதிமுகவினருக்கும், விருதுநகர் மாவட்டம் அம்மன் பட்டியைச் சேர்ந்த திமுகவினருக்கும் உள்ளாட்சி தேர்தலில் இருந்தே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அம்மன்பட்டியைச் சேர்ந்த திமுகவினர் சிலர் முத்துபட்டியைச் சேர்ந்த அதிமுகவினரான இருளாண்டி, முத்துராமலிங்கம், கண்ணன் ஆகியோரை அரிவாளால் வெட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த 3 பேரும் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முத்துராமலிங்கம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் அம்மன்பட்டியைச் சேர்ந்த திமுகவினருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மண்டலமாணிக்கம் போலீசார், தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோதல் சம்பவம் காரணமாக அப்பகுதியில் வன்முறை நிகழாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.