வீட்டிற்குள் புகுந்த பாம்பு- அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்

தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீள்முள்ள பாம்பை, தீயணைப்புத்துறையினர் பிடித்து அடர்வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.  

வீட்டிற்குள் புகுந்த பாம்பு- அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்

தூத்துக்குடி மாவட்டம் அடுத்த சிவன் கோவில் தெப்பக்குளம் அருகே உள்ள வீடொன்றில் இன்று காலை 5 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் வகை பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் பாம்பை கண்டது அலறி அடித்து வெளியில் ஓடி வந்தனர்.

இது குறித்து உடனடியாக தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர்,வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு வீட்டிற்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் வகை பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாகப் பிடித்து அப்புறப்படுத்தினர்.

பிடிபட்ட பாம்பு வல்லநாடு அடர்வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு சென்றுவிடப்பட்டது.