களமிறங்கிய மாண்டஸ்...! எச்சரிக்கை...! என்ன சொல்கிறார் பாலச்சந்திரன்...?

களமிறங்கிய மாண்டஸ்...! எச்சரிக்கை...! என்ன சொல்கிறார் பாலச்சந்திரன்...?

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் மாண்டஸ் தீவிர புயல் இன்று காலை வலு விழுந்து புயலாக மாறியது. காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தெற்கு - தென் கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு வடகிழக்கில் சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கும். இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கனமழைக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர்,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தருமபுரி , சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். புதுவை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறினார். நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் ,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் சென்னையில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. காற்றுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று மதியம் முதல் மாலை வரையில் பலத்த காற்றானது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சமயங்களில் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மாலை முதல் நாளை அதிகாலை வரையில் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வரையிலும் சமயங்களில் 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். பின்னர் நாளை அதிகாலை முதல் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் குறைந்து நாளை மாலை 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் சமயங்களில் 50 கிலோ மீட்டரில் வீசக்கூடும். தென் தமிழக கடலோர பகுதிகளான மன்னார் வளைகுடா பகுதிகளை பொறுத்தவரையில் இன்று மாலை துவங்கி நாளை அதிகாலை வரை பலத்த காற்றானது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் சமயத்தில் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் 10 ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

புயல் கரையை கடந்த பிறகு  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது கரையை கடந்த மூன்று மணி நேரத்தில் வலு விழக்ககூடும். அதன் காரணமாக வடதமிழகத்தின் உள் பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : குப்பை லாரிகள் இயக்க தடை விதிக்க கோரிக்கை...! பொதுநல மனு தாக்கல்...!