வெயிலின் தாக்கத்தை குறைக்க கோயில்களில் சிறப்பு வசதி.. அமைச்சர் சேகர் சொன்ன முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வெயிலின் தாக்கத்தை குறைக்க கோயில்களில் சிறப்பு வசதி.. அமைச்சர் சேகர் சொன்ன முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு  வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் நீர் தெளிப்பான் பொருத்தப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு, சூரிய மின்சக்தி மூலம் தானாக இயங்கக்கூடிய 2 சோலார் விளக்கை பயன்பாட்டிற்கு தொடக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தற்போதைய அரசு மேற்கொண்டுள்ளதாக கூறினார். வெயிலின் தாக்கத்தை குறைத்திட அனைத்து கோவில்களிலும் தென்னை நார் பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சை ஜூஸ் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.