அப்பன் குதிருக்குள் இல்லை எனும் அதிமுகவினர்... பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு...

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படியே கோடநாடு வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதாக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அப்பன் குதிருக்குள் இல்லை எனும் அதிமுகவினர்... பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு...

சட்டப்பேரவையில், கோடநாடு வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முதலமைச்சர், கோடநாடு வழக்கில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என தெரிவித்தார்.

கோடநாடு குற்றச் சம்பவ வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். யாரும் பயப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், கோடநாடு வழக்கு தொடர்பாக ஏற்கனவே திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, நீதிமன்ற அனுமதியுடன் முறைப்படி விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். அப்பன் குதிருக்குள் இல்லை என்று அதிமுகவினரே கூறுவதாகவும் ஸ்டாலின் கிண்டல் செய்தார்.