இதை தட்டிக்கேட்க யாருதான் வருவா? தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து இலங்கை கடற்படையினர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை தட்டிக்கேட்க யாருதான் வருவா? தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து இலங்கை கடற்படையினர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 30- க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக, கச்சத்தீவு அருகே சென்றனர். அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபேது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகில் இருந்த வலைகளை வெட்டி, சேதப்படுத்தியுள்ளனர். மேலும், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். இதனால் தமிழக மீனவர்கள் கவலையுடன் கரை திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் இது தொடர்பாக, ராமேஸ்வரம் மீனவர்கள் பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.