இ.பி.எஸ் 30 அடி கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்த இளைஞர்கள்!!!

பல்லாவரம் அருகே கோவில் திருவிழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு 30 அடி கட்டவுட். ஆபத்தான முறை இளைஞர்கள் எடப்பாடி கட்டவுட்டுக்கு பால் ஊற்றி அபிஷேகம்.

இ.பி.எஸ் 30 அடி கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்த இளைஞர்கள்!!!

தமிழ்நாடு முழுவதும், ஆடிப் பண்டிகைகள் படு விமர்சையாக கொண்டாடப்பட்டு  வருகிறது. கோவில்களில், ஆடி திருமஞ்சனம் தொடங்கி, கூழ் வார்த்தல், தீமிதி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அம்மன் ஊர்வலம் என கலைக்கட்டி வரும் நிலையில், சென்னை பல்லாவரத்தில் சில இளைஞர்கள், பயங்கரமான சாகசம் செய்து, அனைவரையும் பதை பதைக்க வைத்துள்ளனர்.

பல்லாவரம் நெமிலிச்சேரியில் உள்ள அருள்மிகு ஓம்சக்தி பேரியம்மன் ஆலயம் 5 ம் வாரம் ஆடி திருவிழா நெமிலிச்சேரி நண்பர்கள் குழு சார்பில் ஸ்ரீதர் விஜயராகவன் தலைமையில் கோலாகலமாக  நடைபெற்றது. இதில் வாணவேடிக்கை, பாரம்பரிய கலைகள் அரங்கேற்றம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர்வலமாக சென்று பக்தர்கள் கண்டுகளித்தனர்.

விழாவில் லக்ஷ்மன் ஸ்ருதி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். இதில் அதிமுக இடை கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 30 அடியில் கட் அவுட்டு வைக்கப்பட்டது.

அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வைக்கப்பட்ட கட்டவுட்டில் ஏறி ஆபத்தான முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு  பால் அபிஷேகம் செய்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் எம்.பி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ தன்சிங் ஆகியோருக்கு விழா குழு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

ஏற்கனவே, ஒரு விளம்பரத்தில், எங்கள் கடவுள் எடப்பாடி பழனிச்சாமி ஐயாவுக்கு தான் அர்ச்சனை என்று வரும் வசனத்திற்கு பல வகையான விமர்சனங்கள் எழுந்து நிலையில், இது போன்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.