அஞ்சல் தலையை வெளியிட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி...அதனை பெற்றுக்கொண்ட தமிழிசை செளந்தரராஜன்..!

அஞ்சல் தலையை வெளியிட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி...அதனை பெற்றுக்கொண்ட தமிழிசை செளந்தரராஜன்..!

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251-வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒண்டிவீரன் அஞ்சல் தலையை வெளியிட்டார். 

தபால் தலை வெளியீட்டு விழா:

இந்திய நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,  சுதந்திரத்திற்காக பாடுபட்ட அறியப்படதா வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்று வருகின்றது. அதன்படி இன்று சுதந்திர போராட்ட வீரரான ஒண்டி வீரனின் நினைவு தினத்தையொட்டி, நெல்லையில் தபால் தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. 

மேலும் படிக்க: https://www.malaimurasu. com/posts/tamilnadu/Is-it-illegal-for-the-government-to-appoint-a-university-vice-chancellor

மாலை அணிவித்து மரியாதை:

தபால் தலை வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக, சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் சிலைக்கு தமிழக ஆளுநரும், தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன் இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அஞ்சல் தலையை வெளியிட்ட ஆளுநர்:

இதனையடுத்து, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251-வது நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய தகவல் தொடர்புத்துறை  சார்பில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒண்டிவீரன் அஞ்சல் தலையை வெளியிட்டார். இதனை தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருக்க கூடிய தமிழிசை சௌந்தரராஜன் பெற்றுக் கொண்டார்.