மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சி - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி

மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று  தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.

மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சி - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது என இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு:

டெல்லியில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தங்கள் பக்கம் நியாயம் உள்ளதால் மேகதாது குறித்து விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால்  வரும் வெள்ளிக்கிழமை தமிழக அரசு அதிகாரிகள்  காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்றார்.

அதே வேளையில், மத்திய நீர்வள ஆணையமும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் நியாயப்படி நடக்கவில்லை எனவும்  மத்திய அரசின் ஏஜெண்ட் போல் செயல்படுகிறது எனவும் துரை முருகன் குற்றம்சாட்டினார்.

இரண்டு ஆணையமும் முறையாக செயல்பட்டு இருந்தால் நீதிமன்றத்தை நாடி இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது எனவும்  துரைமுருகன் குறிப்பிட்டார்.