சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 98.59 கோடி நிதி ஒதுக்கீடு...!

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 98.59 கோடி நிதி ஒதுக்கீடு...!

சென்னையில் புதிய பூங்காக்கள் விளையாட்டு திடல்கள் உள்ளிட்ட 42 பணிகள் அமைக்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், கடற்பாசி பூங்காக்கள் உள்ளிட்ட 42 பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளார். சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற வகையிலும், மூத்த குடிமக்கள், குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலும் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் படிக்க : கழுதையா? ஆடா? மாநிலங்களவையில் நிகழ்ந்த கலகலப்பான விவாதம்...இறுதியில் ஜெயிச்சது யார்?

அதன்படி, கால்பந்து, பூப்பந்து மற்றும் கைப்பந்து மைதானங்கள் உள்ளிட்ட பல வசதிகளுடன் கூடிய 2 விளையாட்டு திடல்களும், 11 பூங்காக்களும், 10 கடற்பாசி பூங்காக்களும், 2 மயானங்களும், 16 பள்ளிக்கூடங்களும் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.