35 வயதாகியும் திருமணம் ஆகவில்லையே... விரக்தியில் ரயில்முன் பாய்ந்த இளைஞர்...
சிதம்பரத்தில் 35 வயது ஆகியும் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் ஒருவர் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம் அருகே பிள்ளைமுத்தாபிள்ளைசாவடி பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் ரவிச்சந்திரன் வயது 35 இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்க்கப்பட்டு வந்ததாகவும் வரன் சரியாக அமையவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் 35 வயது ஆகியும் இதுவரை திருமணம் ஆகவில்லை என மன அழுத்தத்தில் இருந்த ரவிச்சந்திரன் வல்லம்படுகை ரயில் நிலையத்திற்கு இடையில் சிவபுரி அருகில் அந்த வழியாக வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் சிதம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சென்ற ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணையின்போது திருமணம் ஆகாத விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. வாலிபர் ஒருவர் திருமணமாகாத விரக்தியில் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.