அதிமுக கட்சி சசிகலாவின் கையில்தான் சேரப் போகிறது.....கார்த்திக் சிதம்பரம்

அதிமுக கட்சி சசிகலாவின் கையில்தான் சேரப்போகிறது. இதை அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏற்றுக் கொள்வார்கள் ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்சி சசிகலாவின் கையில்தான் சேரப் போகிறது.....கார்த்திக் சிதம்பரம்

சிவகங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக்சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது, நான் ஒரு வருடமாக கூறியது போல் அதிமுக கட்சி சசிகலாவின் கையில்தான் சேரப்போகிறது. இதை அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏற்றுக் கொள்வார்கள் ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறினார்.

சீமானுக்கு கிடைக்கிற வாக்கு நிரந்தர வாக்கு கிடையாது என கூறிய அவர், சீமான் ஒரு சிலரது உணர்வுகளை தூண்டி தற்காலிகமாக வாக்கு பெறுகிறார் என்றார். மேலும் ஒரு தேர்தலில் வாக்களிப்பவர்கள், மறு தேர்தலில் சீமானுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் அடுத்த தேர்தலின் போது கட்சியில் இருக்க மாட்டார்கள் என தெர்வித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் பாஜக கட்சி ஒரு நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்றும் அவர்களது ஹிந்தி, இந்துத்துவா கொள்கைகளை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.