புதுமைப் பெண் திட்டத்தால்...வாழும் பாரதியாக முதலமைச்சர் திகழ்கிறார் - செஞ்சிமஸ்தான்!

புதுமைப் பெண் திட்டத்தால்...வாழும் பாரதியாக முதலமைச்சர் திகழ்கிறார் - செஞ்சிமஸ்தான்!

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் வாழும் பாரதியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திகழ்ந்து வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திமுகவின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். 

இதையும் படிக்க : பெண்களுக்கு முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு 2-லிருந்து 4 ஆக மாற்றம்...போக்குவரத்துத்துறை அதிரடி!

அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே உயர் கல்வியில்  51 சதவிகிதம் பேர் படித்து பயன் பெறும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருவதாகவும், புதுமைப் பெண்கள் திட்டத்தை கொண்டு வந்து, பாரதியார் கண்ட புதுமைப் பெண்களை முதலமைச்சர் உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.