கல்லூரிகள், பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு...

தமிழகத்தில் கல்லூரிகள், பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். 

கல்லூரிகள், பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு...

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் ஆக்ஸ்ட் 1-ம் தேதி திட்டமிட்டபடி தொடங்கும் என்றும், தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் எனவும் தெரிவித்தார். 

பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், அதுகுறித்து  விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.