ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு திமுக உறுதுணையாக இருக்கும்..!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உறுதி..!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு திமுக உறுதுணையாக இருக்கும்..!

ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மையை கண்டறிய தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பட்டறைபெருமந்தூரில் உள்ள சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, 500-க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.