திராவிட கட்சியை வளர்த்த 3 தலைவர்களின் வரலாறு தெரியாமல் ஆளுநர் உளறுகிறார் - வைகோ குற்றச்சாட்டு!

திராவிட கட்சியை வளர்த்த 3 தலைவர்களின் வரலாறு தெரியாமல் ஆளுநர் உளறுகிறார் - வைகோ குற்றச்சாட்டு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. காலாவதியாகிப் போன ஒரு மனிதர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு கட்சிக் கொடியேற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். 

இதையும் படிக்க : தொடரும் கலவரம்... பெட்ரோலுக்கு வந்த நெருக்கடி...காத்திருக்கும் மக்கள்!

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திராவிட கட்சிகளை 3 பெரிய தலைவர்கள் எத்தனையோ சோதனைகள் கடந்து வளர்ந்த வரலாறு தெரியாமல் ஆளுநர் உளறிக் கொண்டிருக்கிறார் என குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. காலாவதியாகிப் போன ஒரு மனிதர், அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு அவரை ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.