சிறுவர், சிறுமிகளிடம்ஆபாச கருத்து.. நெனச்சு கூட பாக்க முடியல ... மதன் மீது மக்கள் பாய்ச்சல்

சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசக் கருத்தை திணித்த மதனின் செயலை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என்று தாதகாப்பட்டி பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளர்.

சிறுவர், சிறுமிகளிடம்ஆபாச கருத்து.. நெனச்சு கூட பாக்க முடியல ...   மதன் மீது மக்கள் பாய்ச்சல்
பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஆபாசமாக பேசி தனது யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்டு வந்த மதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரியில் வைத்து நேற்று கைது செய்தனர். பப்ஜி மதனை சென்னையில் போலீசார் விடிய விடிய சோதனை நடத்திவந்த நிலையில், சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறார் என்று தகவல் பரவத் தொடங்கியது.
 
இந்த தகவலையடுத்து, சேலத்தில் தாதகாப்பட்டியில் உள்ள அவரது வீட்டின் முன்னே அவரை காணும் ஆர்வத்தில் கூடினர். சிறிதுநேரத்தில் அது தவறான தகவல் என்று தெரிந்தபின்னர் கலைந்து சென்றனர்.
 
பப்ஜி மதன் செயல்குறித்து வேதனைப்படும் தாதகாப்பட்டி பகுதி பொதுமக்கள்,  பொழுதுபோக்கிற்காக விளையாடும் சிறுவர் சிறுமிகளிடம், ஆபாசக் கருத்துக்களை திணித்து அவர்களை அடிமைப்படுத்தியதை எக்காரணம் கொண்டு ஏற்றுக் கொள்ளமுடியாது என்று அதிருப்தி தெரிவித்தனர்.