மின்சாரம் தாக்கிய நாயை காப்பாற்ற சென்ற சிறுவன் படுகாயம்!! என்ன நடந்தது??

சென்னை அடுத்த ஆவடியில், மின்சாரம் தாக்கிய நாயை மீட்க சென்ற சிறுவன் தூக்கி வீசப்பட்டதில், படுகாயம் அடைந்தான்.

மின்சாரம் தாக்கிய நாயை காப்பாற்ற சென்ற சிறுவன் படுகாயம்!! என்ன நடந்தது??

கண்ணப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது வீட்டருகே இரு தினங்களுக்கு முன் மின்கம்பம் உடைந்து சேதமடைந்ததை அடுத்து, மின்சார ஊழியர்கள் ஒயரை பிரகாஷ் வீட்டு கம்பி வேலியில் இணைத்து கட்டியுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று வீட்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்த நாய் கம்பி வேலியில் மோதியதில், மின்சாரம் தாக்கியுள்ளது. இதனைக்கண்ட சிறுவன் நாயை மீட்க முயன்றதில், அவன் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டுள்ளான். இதில் நாய் உயிரிழந்த நிலையில், சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.