இளம்பெண்ணுடன் உல்லாசம்.. 3 முறை கர்ப்பமாக்கிவிட்டு டிமிக்கி கொடுத்த வாலிபத்தின் மன்மதன்
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் விதவை மற்றும் இளம்பெண்ணை ஏமாற்றி பணம், நகைகளை கொள்ளையடித்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
திசையன்விளையை சேர்ந்த சசிகலா என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
கணவர் இறந்ததால் குடும்பத்தை நடத்த தனியார் கடையில் சசிகலா வேலை பார்த்து வந்த போது அவருக்கும் அதே கடையில் வேலை பார்த்து வந்த முத்து என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பமடைந்த சசிகலா, தம்மை திருமணம் செய்துகொள்ளுமாறு முத்துவை கேட்ட போது அவர் ஏமாற்றி வந்துள்ளார்.
பின்னர் நடந்தது குறித்து சசிகலா போலீசில் புகார் அளித்ததால் முத்து திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது வரை சசிகலாவை திருமணம் செய்யாமல் அவரை ஏமாற்றி அவரிடமிருந்து பல லட்ச ரூபாய் மற்றும் நகை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா முத்துவின் வீட்டு முன்பு தம்மை திருமணம் செய்ய கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதேபோன்று முத்துபேச்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ப்ரியங்கா என்பவரை அஜித் குமார் என்பவர் காதலித்து வந்துள்ளார். அப்போது பிரியங்காவை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவரிடம் நெருக்கமாக இருந்துவிட்டு தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ப்ரியங்கா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.