காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்கள்...! போலீசார் விசாரணை..!

குளித்தலை, கடம்பன்துறை காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்கள்...! இருவர் உயிரிழந்த நிலையில், ஒருவரை தேடும் பணி தீவிரம்...

காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்கள்...! போலீசார் விசாரணை..!

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகன்கள் அருண்குமார் (25), வெங்கடாசலம் (22). அண்ணன் தம்பியான இருவரும் தங்களது குடும்பத்தினருடன் வீரப்பூர் கோவில் செல்வதற்காக, குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றிற்கு குளிக்க சென்றுள்ளனர்.

தற்போது காவிரி ஆற்றில் 61 ஆயிரம் கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. அதன் விபரீதத்தை உணராமலும், பொதுமக்களின் எச்சரிக்கையையும் மீறி நீச்சல் தெரியாத சகோதரர்கள் இருவரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனை பார்த்த அவரது உறவினரான ஹரிஷ் குமார் என்ற இளைஞர், அவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்ற  போது அவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

அப்போது அவர்  கூச்சலிடவே  அருகில் இருந்த பொதுமக்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட வெங்கடேஷ், ஹரிஷ் குமார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

மேலும் காவிரி ஆற்றில் நீரில்  அடித்துச் செல்லப்பட்ட அருண்குமாரை முசிறி தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.