ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பேருந்து ஓட்டுனர்...! 2-ஆம் நாளாக தேடும் பணி தீவிரம்..!

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பேருந்து ஓட்டுனர்...! 2-ஆம் நாளாக தேடும் பணி தீவிரம்..!

திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (45). இவர் அரசு பேருந்து ஓட்டுநராக இருந்துள்ளார். இவர் நேற்று இரவு அகரம்பள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் இறங்கியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அடித்துச் செல்லப்பட்டார். அப்போது அவரின் கூச்சல் சத்தம் கேட்டு, முருகனைத் தேடி அக்கம் பக்கத்தினர் தென்பனையாற்றில் இறங்கி தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. மேலும் அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதால் அவரை தேடும்பணி மிகவும் சிரமமாக இருந்த நிலையில் இன்று காலையில் இருந்து இரண்டாம் நாளாக மீண்டும் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.