ரயிலில் கேட்பாரற்று கிடந்த குழந்தை... திருப்பத்தூர் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு...

ஜோலார்பேட்டை -அரக்கோணம் செல்லும் ரயிலில் பிறந்த மூன்று நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கேட்பாரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

ரயிலில் கேட்பாரற்று கிடந்த குழந்தை... திருப்பத்தூர் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு...

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயிலில் பச்சிளம் குழந்தை ஒன்று கேட்பாரற்று அழுதுகொண்டே வருவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை காட்பாடி ரயில் நிலையத்தில், ரயில் நின்ற போது பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து குழந்தையை யார் ரயிலில் வைத்து சென்றனர் என்பது குறித்து அவர்கள்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குழந்தையை திருப்பத்தூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.