தாயை பணி நீக்கம் செய்த துணி கடை உரிமையாளர்: ஆத்திரத்தில் அடியாட்களை வைத்து வெளுத்து வாங்கிய மகன்...

புதுச்சேரியில் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த தனது தாயாரை பணி நீக்கம் செய்ததால் ஆத்திரம் அடைந்த மகன், நண்பர்களுடன் சேர்ந்து கடை உரிமையாளரை தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. 

தாயை பணி நீக்கம் செய்த துணி கடை உரிமையாளர்: ஆத்திரத்தில் அடியாட்களை வைத்து வெளுத்து வாங்கிய மகன்...

புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். மாற்றுத்திறனாளியான இவர் கோட்டைமேடு பகுதியில் துணி கடை  நடத்தி வருகிறார். இவருடைய கடையில்  பொறையூர் பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண் பணிபுரிந்து வந்த நிலையில், சாரியாக வேலை செய்யவில்லை என கூறி அவரை உரிமையாளர் பாலமுருகன் பணி நீக்கம் செய்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சத்தியாவின் மகன் ராம்குமார் நண்பர்களுடன் சென்று கடை உரிமையாளர் பாலமுருகன் மற்றும் ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறுது. இந்த காட்சிகள் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.