ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் தி.நகரில் திறப்பு

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் தொகுதி அலுவலகம் தி.நகரில் திறக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் தி.நகரில் திறப்பு
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் தொகுதி அலுவலகம் தி.நகரில்  திறக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பால்வளத்துறை அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தனர். 
 
ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரவாயல் , ஆலந்தூர், அம்பத்தூர் சட்டமன்றத்  தொகுதிகள் சென்னை பெருநகர எல்லைக்குள் வருவதால் மூன்று தொகுதி மக்களும் மனு கொடுப்பது , நலத்திட்ட பணிகள் குறித்து முறையிடுவதற்கு ஏற்ற வகையில் எளிதில் அணுகும் வகையில் இந்த அலுவலகம் தியாகராய நகரில் திறக்கப்பட்டுள்ளது.  
 
ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான அலுவலகம் தாம்பரத்தில் திறக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாவது அலுவலகமாக தியாகராய நகரில் திறக்கப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மூன்று சட்டமன்ற தொகுதி மக்கள் எளிதில் அணுகும் விதமாக தி.நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.