திருமணமாகி 4 மாதங்களே ஆன இளைஞர் உயிரிழப்பு.. !

பண்ருட்டியில் திருமணமாகி 4 மாதங்களே ஆன இளைஞர் உயிரிழப்பு.. !!

திருமணமாகி 4 மாதங்களே ஆன இளைஞர் உயிரிழப்பு.. !

கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என் புரம், சென்னை சாலையில் வசித்து வருபவர் மோகன். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் மகன் ராஜ்கமல்(34). இவருக்கு திருமணம் ஆகி நான்கு மாதங்கள் ஆகியுள்ளது. இந்நிலையில் தனது இரு சக்கர வாகனத்தில், ரயில்வே மேம்பாலத்தின் மேல் சென்றுள்ளார். அந்த சாலையில், இறுதிச் சடங்கில் போடப்பட்ட  மாலைகள் வீசப்பட்டு இருந்தன. அந்த மாலை மீது  இருசக்கர வாகனம் ஏறியதில் சறுக்கி விழுந்து பாலத்தின் மேல் உள்ள சிமெண்ட் கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து, தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.