கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த நாய்...!

மணப்பாறையில் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த நாய்...!

கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த நாய்...!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள முத்தன் தெரு பகுதியில் வீடு கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் கழிவு நீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. அந்த தொட்டியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நாய் ஒன்று தவறி விழுந்துள்ளது. 

இரண்டு நாட்களாக நாய் அதே தொட்டியில் கிடப்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நாயை கம்பி கட்டி மீட்டு பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவிழ்ந்து விட்டதும் நாய் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டது.