பேனரை அடித்து கிழித்த போதை ஆசாமி...! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்...!

பேனரை அடித்து கிழித்த போதை ஆசாமி...! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்...!

நெல்லை மாவட்டம் திசையன்விளை பாஜக காமராஜர் சிலை அருகில் பிரதமர் மோடி மற்றும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்ட பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. கையில் நீண்ட உருட்டுக்கட்டை, தலையில் காவி நிற தலைப்பாகை அணிந்த ஆசாமி ஒருவர், ஆவேசமாக பிளக்ஸ் பேனரில் உள்ள மோடி மற்றும் அண்ணாமலையின் படங்களை உருட்டு கட்டையால் அடித்து கிழித்தார். மேலும் அருகிலுள்ள பாஜகவின் கொடிக்கம்பத்தையும் அடித்து சாய்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் இரு பிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற செயலில் ஒருவர் ஈடுபடுவது மேலும் பிரச்சனையை பெரிதாக்கியுள்ளது. இதனை உணர்ந்த பொதுமக்கள் பிளக்ஸ் பேனரை கிழித்து ஆசாமியை காமராஜர் சிலைக்கு அருகில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர். மேலும் பாஜக சார்பில் திசையன்விளை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களின் தர்ம அடியில் இருந்து பிளக்ஸை கிழித்த ஆசாமியை அழைத்துச் சென்றனர். விசாரணையில் அந்த ஆசாமி உவரி அருகே உள்ள குஞ்சன்விளை கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் என்பதும் கஞ்சா போதையில் இது போன்ற செயல்களில் அவர் அடிக்கடி ஈடுபடுவதும் தெரிய வந்தது. இந்நிலையில் அவரை கைது செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.