அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட வெளி மதிப்பீட்டுக் குழுவினர்..!

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் தேசிய தர உறுதி, தர நிலைகள் ஆகியவற்றை வெளி மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட வெளி மதிப்பீட்டுக் குழுவினர்..!

திண்டிவனம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக பல்வேறு கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் தேசிய தர உறுதி தர நிலைகள் ஆகியவற்றை வெளி மதிப்பீட்டு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

இந்த குழுவில் டாக்டர் மனிஷ் பிரியதர்ஷி, சுவேந்திர நாத் ஹண்டி, பெட்டிசெட்டி கிராந்தி ஆகியோர் மத்திய அரசு மூலம் வருகை தந்து மருத்துவமனையின் தற்போதைய நிலைகள், கட்டிட வசதிகள், இட வசதிகள், நோயாளிகள் பராமரிக்கப்படும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு கட்ட ஆய்வுகளில் ஈடுபட்டனர். இதில் மருத்துவமனை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.