கடனுக்காக மகனை அடமானம் வைத்த தந்தை! போலீசில் புகார் அளித்தும் ஆக்‌ஷன் இல்லாததால் தாய் தர்ணா!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பெற்ற மகனை கடனுக்கான கணவர் அடமானம் வைத்துள்ளதாக மனைவி புகார் அளித்துள்ளார்.

கடனுக்காக மகனை அடமானம் வைத்த தந்தை! போலீசில் புகார் அளித்தும் ஆக்‌ஷன் இல்லாததால் தாய் தர்ணா!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பெற்ற மகனை கடனுக்கான கணவர் அடமானம் வைத்துள்ளதாக மனைவி புகார் அளித்துள்ளார்.

பரமக்குடி நகைக்கடை பஜாரை சேர்ந்த ரமேஷ்,  சரண்யா தம்பதிக்கு ரூபேஷ் என்ற 13 வயது  மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பல இடங்களில் ரமேஷ் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடன் பிரச்சணையால் ரமேஷ் தனது மகன் ரூபேஷை காலையில் கடன் பெற்றவரிடம் ஒப்படைத்து விட்டு, பணம் செலுத்திய பின் மாலை வீட்டுக்கு அழைத்து வருவதை வாடிக்கையாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சரண்யா இது குறித்து பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்காததால்  சரண்யா தனது மகனுடன் பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.