தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு....தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு....தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

2022 ஜனவரி முதல் நாளை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டது. 

அதன்படி, தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 பேர். அதில், 3 கோடியே 9 லட்சத்து 17 ஆயிரத்து 667 பேர் ஆண்கள். 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரத்து 522 பெண்கள். 7,342 பேர் மூன்றாம் பாலினத்தவர் எனவும் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது. 

அதில் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பத்தவர்களின் விண்ணப்பங்கள் முழுவதுமாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.