அறநிலைய துறையின் புதிய விதிகளை எதிர்த்து வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து தமிழக அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறநிலைய துறையின் புதிய விதிகளை எதிர்த்து வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக கொண்டுவரப்பட்ட புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் முத்துகுமார் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் எனும் இடத்தில் உள்ள மதுர காளியம்மன் கோவில் பரம்பரை பூசாரிகள் எட்டு பேர் உயர் நீதிமன்றத்தில் இன்று புதிதாக மேலும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும், மரபுக்கு மாறாக இந்து சமய அறநிலையத்துறை வயது வரம்பு நிர்ணயிப் பது சட்டவிரோதமானது என்றும். ,

மரபுகளை மீறும் வகையில் இருக்கும் புதிய விதிகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, இதுகுறித்து தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளையும் இந்த வழக்கோடு சேர்த்து பட்டியலிடுமாறு கூறிய நீதிபதிகள், விசாரணையை 5 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.