எலும்புகூடாக கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம்- கொலையா ? தற்கொலையா ? போலீஸ் விசாரணை

கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் எலும்பு கூடாக, ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

எலும்புகூடாக கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம்- கொலையா ? தற்கொலையா ? போலீஸ் விசாரணை

கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை ஓரமாக இருந்த முள்புதரின் தூக்கில் தொங்கிய நிலையில் எலும்புகூடு ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தூக்கிய தொங்கிய நிலையில் இருந்த எலும்புகூட்டை மீட்டனர்.

அத்துடன் சட்டைப்பையில் இருந்த மருத்துவ சீட்டுகளை கைப்பற்றி , உடற்கூறு ஆய்விற்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த நிலையில் எலும்பு கூடாக இருக்கும் ஆண் சடலம் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர், கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? அல்லது தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.