ஆற்றில் குளிக்க சென்றபோது துயரம்... பாய்  வியாபாரி  தண்ணீரில் மூழ்கி பலி...

ஆற்றில் குளிக்க சென்ற பாய்  வியாபாரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆற்றில் குளிக்க சென்றபோது துயரம்... பாய்  வியாபாரி  தண்ணீரில் மூழ்கி பலி...

ஓரத்தநாடு அருகே  உள்ள சூரக்கோட்டை கிராமத்தில் மதுரை சேர்ந்த மணிகண்டன் அவருடைய நண்பர்களுடன் தங்கி  பல்வேறு பகுதிகளில் பாய் வியாபாரம் செய்து வந்தார். 

இந்நிலையில் நேற்று வியாபாரத்தை முடித்துக் கொண்டு மணிகண்டன் மற்றும் அவரது சக நண்பர்கள் சூரக்கோட்டை கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்க சென்றனர்.

அப்போது தண்ணீரில் தவறி விழுந்த மணிகண்டன் ஆற்றின் சுழற்சியில் சிக்கி பலியானார்.  
இதனையடுத்து  நீரில் அடித்து செல்லப்பட்ட மணிகண்டனின் உடல்  ஒரத்தநாடு அருகே மேல உளூர் கல்லணை கால்வாய் ஆற்றில் மீட்கப்பட்டது.